தனது கடைசி டிவிட்டர் பதிவில் கௌரி லிங்கேஷ் கூறியது என்ன?
வலதுசாரிகள் மற்றும் வகுப்புவாதத்தைத் தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூரில் செவ்வாய்க்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
கௌரி லங்கேஷின் மரணத்துக்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவர் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. டிவிட்டர் சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கிவந்த கௌரி லங்கேஷ், கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பதிவு வெளியிட்டிருந்தார்.
தனது டிவிட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்ட போலி செய்தி ட்வீட்கள் உள்ளிட்ட பலவற்றை கௌரி மீண்டும் ட்வீட் செய்துள்ளார். போலி செய்திகள் சில சயங்களில் தவறுதலாக பகிரப்பட்டு வருவது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு 9 மணி நேரம் முன்னதாக, ரோஹிஞ்சா முஸ்லிம்கள் குறித்த செய்தி இணைப்பு ஒன்றை கௌரி ட்வீட் செய்தார்.
இந்நிலையில் கௌரி இறந்தபிறகு அவரது ட்வீட்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதங்கள் நடந்துவருகின்றன.
கடைசி டிவிட்டரில் கௌரி சொன்னது என்ன?
தான் இறப்பதற்கு முன்பு கௌரி வெளியிட்டிருந்த ட்வீட்களில் போலி செய்திகள் பகிரப்படுவது குறித்து கௌரி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தனது டிவிட்டரில், ''போலியான செய்திகள் தொடர்பான பதிவுகளை பகிர்ந்துவிடும் தவறினை நாம் செய்துவிடுகிறோம். இது குறித்து நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாம்; மற்றவர்களின் தவறுகளை படம்போட்டுக்காட்ட முயற்சிக்க வேண்டாம்'' என்று கௌரி தெரிவித்திருந்தார்.
இதற்கு அடுத்து அவர் வெளியிட்ட ட்வீட்டில் , ''நாம் நமக்குள் சண்டை போட்டு வருவதாக ஏன் எனக்கு தோன்றுகிறது? நமது பெரிய எதிராளி யார் என்று நமக்கு தெரியும். அது குறித்து நாம் கவனம் செலுத்தலாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமது தந்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கிய 'லங்கேஷ் பத்திரிகே' என்ற பத்திரிகையை நடத்திவந்த அவர், தமது வீட்டுக்கு எதிரிலேயே செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமது பத்திரிகையின் வாயிலாக, சமூக நல்லிணக்க மன்றம் (Communal Harmony Forum) என்ற அமைப்பை தீவிரமாக முன்னெடுத்துவந்தார் கௌரி.
கௌரியின் தந்தை பி.லங்கேஷ், ஒரு கவிஞர், எழுத்தாளர், விருது பெற்ற திரைப்பட இயக்குநர்.
தமது தாய், தமது சகோதரியும் விருது பெற்ற திரைப்பட இயக்குநருமான கவிதா லங்கேஷ், சகோதரன் இந்திரேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார் கௌரி.
பிற செய்திகள்
- 'நீட்' தேர்வு: பலன் தருமா போராட்டங்கள்?
- மூத்த பத்திரிகையாளர் கௌரி லிங்கேஷ் சுட்டுக்கொலை
- மருமகளை தாக்குவதற்காக இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற தம்பதி!
- மியான்மர் ரொஹிஞ்சா நெருக்கடி: ஆங் சான் சூ சி ஏன் செயல்படமாட்டார்?
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications