"வயாகரா" மாத்திரையை சாப்பிட்டு ஆசை ஆசையாய் .. "இனி வாழ்நாள் முழுவதும்.." இப்ப மானமே போச்சே!
வயாகரா ஓவராக சாப்பிட்டதால் இளைஞரின் வாழ்க்கையே பாழாகிவிட்டது
கான்பூர்: ஆண்மை குறைபாடு இருப்பதாக நினைத்து, இளைஞர் ஒருவர் மீளமுடியாத துயரில் சிக்கி கொண்டுள்ள துயரம் நடந்துள்ளது..!
உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜ் என்ற இடத்தை சேர்ந்தவர் சூரஜ்.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. 28 வயதாகிறது.. இவருக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது..
வரி ஏய்ப்பு புகார்: கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 3-வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு
ஆனால் இவருக்கு ஆண்மை குறைபாடு இருந்திருக்கிறது போலும்.. அதனால், தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போயுள்ளது.. மற்றொரு பக்கம் மனைவியை திருப்திப்படுத்த முடியாத இயலாமைக்குள்ளும் அகப்பட்டுக் கொண்டுள்ளார்.
சூரஜ்
இதனால், மனஉளைச்சலில் தவித்து, நிம்மதியில்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.. கடைசியில் தன்னுடைய நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.. அவர்களோ, வயாகரா மாத்திரைகளை எடுத்து கொள்ளுமாறு சொல்லி உள்ளனர்.. உடனே சூரஜ்ஜும், அதுபோலவே வயாகராவை வாங்கி சாப்பிட்டுள்ளார்.. தினமும் 25-30 மில்லி கிராம் வயாக்ராவை சாப்பிட்டுள்ளார்.. ஆனால் அதனால், எந்த வித பலனும் இல்லை என தெரிகிறது.. அதனால், மறுபடியும் நண்பர்களின் ஆலோசனையின் பேரில், வயாகரா அளவை அதிகரித்தார்.. 200 மிகி வயாகரா சாப்பிட தொடங்கினார்..
உடலுறவு
அது ஓரளவு பலனும் தந்துள்ளது.. ஆனால், தொடர்ந்து வயாகராவை சாப்பிட்டபடியே இருந்திருக்கிறார்.. மேலும், இயல்பையும் தாண்டி மனைவியிடம் உறவிலும் இருந்துள்ளார். இதனால், தினமும் சூரஜ் தொல்லை தாங்காமல், சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார் மனைவி.. இதனால், பெற்றோரும் மகளை சமாதானப்படுத்தி, மறுபடியும் சூரஜ் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு சென்றனர்.. உடல்நலக் கோளாறுகள் மெல்ல மெல்ல சூரஜ்ஜை எட்டி பார்த்தன.. ஆனால், அப்போதும் வயாகராவை விடவில்லை சூரஜ்.. தொடர்ந்து சாப்பிட்டார்.. மறுபடியும் அம்மா வீட்டுக்கு கிளம்பி போய்விட்டார் மனைவி.
ஆணுறுப்பு
இந்நிலையில், திடீரென ஆணுறுப்பில் வலி ஆரம்பித்தது.. அந்த வலி அதிகமாகி கொண்டே போனது.. இறுதியில், விறைப்புத்தன்மையில் கொண்டு வந்துவிட்டுவிட்டது. வெகு நேரமாகியும் அந்த விறைப்புத்தன்மை குறையவில்லை.. வலியும் நிற்கவில்லை.. இதனால் பயந்து போன சூரஜ், அப்போதுதான் டாக்டரிடம் சென்றார்.. உடனடியாக சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.. ஆபரேஷன் செய்யப்பட்டது.. இப்போது அந்த வலியை மட்டும் குணப்படுத்தி இருக்கிறார்கள்..
வயாகரா சிக்கல்
ஆனால், விறைப்புத்தன்மை குறையவில்லை.. இனி எப்போதுமே குறையாதாம்.. வாழ்நாள் முழுவதும் அப்படியேதான் இருக்கும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.. இப்போது சிக்கல் என்னவென்றால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமாம், ஆனால், விறைப்புத்தன்மை நீங்காது.. அதேசமயம், விறைப்புத் தன்மை வெளியே தெரியாமல் இருக்க, இறுக்கமான துணியையும் அணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.. எதுவாக இருந்தாலும், டாக்டரை ஆரம்பத்திலேயே சென்று பார்க்காமல், நண்பர்களின் பேச்சைகேட்டு, இன்று மீளா துயரில் சிக்கி கொண்டுள்ளார் சூரஜ்..!