4 மாநிலங்களுடன் சேர்த்து தெலுங்கானாவிற்கும் தேர்தலா?.. இன்று முக்கிய முடிவு!
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்திற்கு எப்போது தேர்தல் நடத்துவது என்று இன்று முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு நேற்று பதவி விலகினார். இதனால் அங்கு ஆட்சி கலைந்துள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த 2014ல் தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் தற்போது அவரது ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் மீதம் உள்ள நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டது.முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க சந்திரசேகர ராவ் முடிவெடுத்தது உள்ளார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அமைச்சரவை உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்தி அமைச்சரவையை கலைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டது பற்றிய அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானாவிற்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இன்று தேர்தல் ஆணையம் விவாதம் நடனத்த உள்ளது. இன்று மதியம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதுபற்றி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்த வருடம் டிசம்பரில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுடன் சேர்த்து தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. இதுகுறித்தே இன்று விவாதம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.