இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அதிக ஆதரவாளர்கள் இருப்பது எங்கு தெரியுமா?
டெல்லி: இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், அதிலும் குறிப்பாக தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர்கள்தான் அதிகப்படியாக ஐஎஸ்ஐஎஸ் மீது ஈர்ப்பு கொண்டுள்ளதாக உளவுத்துறை கூறுகிறது.
நாடு முழுவதிலும் ஐஎஸ்ஐஎஸ் அனுதாபிகளை உளவுத்துறை கண்காணித்து வருகிறது. சுமார் 200 பேர் இவ்வாறான அனுதாபிகள் என தகவல் கிடைத்துள்ளது.

அதில் தெலுங்கானாவை சேர்ந்த 65 பேரும், கர்நாடகாவை சேர்ந்த 50 பேரும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 3வது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. இங்கு சுமார் 48 அனுதாபிகளும், கேரளாவில் 45 அனுதாபிகளும் உள்ளனர்.
தெலுங்கானாவில், தலைநகர் ஹைதராபாத்தில்தான் அனுதாபிகள் அதிகம் என்கிறது அந்த விவரம்.
இணையதளத்தில் பெரும்பாலும் தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை தேடுவதன் அடிப்படையில் இந்த தகவல் திரட்டப்பட்டுள்ளது. அதேநேரம், இணையதளத்தில் தேடுபவர்களையெல்லாம், தீவிரவாத நோக்கம் கொண்டவர்கள் என முத்திரை குத்த முடியாது என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பொறுத்திருந்து அவர்கள் நடவடிக்கையை கண்காணிப்பது என உளவுத்துறை முடிவு செய்துள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சவுதி அல்லது சிங்கப்பூர் சென்று அங்கிருந்து இந்த இந்திய அனுதாபிகள் சிரியாவுக்குள் நுழைவது வழமையாக உள்ளதால், அவர்களை கட்டுப்படுத்துவது உளவுத்துறைக்கு சவாலாக உள்ளது.
சமீபகாலமாக சூடான் வழியாகவும், சிரியாவுக்குள் நுழைவது அதிகரித்துள்ளது, தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர், ஓமனில் பணியாற்றி வந்த நிலையில், சூடான் வழியாக, சிரியாவுக்குள் நுழைந்து தீவிரவாதிகளுடன் இணைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications