அமேதி அரண்மனைக் கலவரம்... யார் இந்த அமீதா?
லக்னோ: உ.பி. மாநிலம் அமேதியில் உள்ள பூபதி பவன் அரண்மனையில் இன்று நடந்த கலவரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதல் வெடிக்கக் காரணமானவர் அமீதா. இவர் காங்கிரஸ் எம்.பியும், ராஜ குடும்பத்து வாரிசுமான சஞ்சய்சிங்கின் 2வது மனைவி ஆவார்.
இவருக்கு எதிராக சஞ்சய் சிங்கின் முதல் மனைவிக்குப் பிறந்த 3 மகன்களும், அவர்களது ஆதரவாளர்களும் போர்க்கொடி உயர்த்தியதால்தான் பிரச்சினை வெடித்து விட்டது.

யார் இந்த அமீதா...
சஞ்சய் சிங்கின் 2வது மனைவி அமீதாவின் கதை உலகம் அறிந்தது. அவர் மறைந்த, இந்தியாவின் புகழ் பெற்ற பேட்மிண்டன் வீரர் சையத் மோடியின் மனைவி ஆவார்.

கள்ளக்காதல்
அமீதாவும், சஞ்சய் சிங்கும் பல வருடங்களுக்கு முன்பு கள்ளக்காதலர்கள் ஆவர். அப்போது சஞ்சய் சிங்குக்கு மனைவி இருந்தார். ஆனால் அதைத் தாண்டி அவர் மோடியின் மனைவியான அமீதா மீது கள்ளக்காதல் கொண்டார். இந்தக் காதல் தொடர்பாக மோடி, அமீதா, சிங் ஆகியோருக்கு இடையே பூசல் வெடித்தது.

கூலிப்படை மூலம் கொல்லப்பட்ட மோடி
இந்த நிலையில் 1988ம் ஆண்டு லக்னோவில் உள்ள கே.டி. சிங் பாபு ஸ்டேடியத்தில் பயிற்சியை முடித்து விட்டு வெளியே வந்தபோது 2 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார் மோடி. நாட்டையே உலுக்கிய கொலைச் சம்பவம் இது.

சஞ்சய் சிங் - அமீதா கூட்டுச் சதி
இந்த கொலை வழக்கில் சஞ்சய் சிங், அமீதா உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கூலிப்படையை ஏவி சையத் மோடியைக் கொலை செய்ததாக சஞ்சய் சிங், அமீதா மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் பின்னர் இந்த வழக்கிலிருந்து இருவரும் எப்படியோ வந்து விட்டனர். அதன் பின்னர் இருவரும் பகிரங்கமாக திருமணமும் செய்து கொண்டனர்.

அன்று முதலே சர்ச்சை
அன்று முதலே சஞ்சய் சிங்கின் குடும்பத்தில் பூசல்தான். முதல் மனைவி, அவரது மூன்று மகன்கள் மற்றும் சஞ்சய் சிங் இடையே இருந்து வந்த மோதல் இன்று வெளிப்படையாக வந்து ஒருவரது உயிரிழப்புக்கம் காரணமாகியுள்ளது. குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications