"என் புருஷன் குளிக்கறதே கிடையாது”- உபி பெண்ணின் “கப்பு” புகார்!
பாக்பட்: உத்திர பிரதேசத்தில் தன் கணவர் தீபாவளி, ஹோலிக்கு மட்டுமே குளிக்கிறார் என்று பெண் ஒருவர் கொடுத்திருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பட் நகரை சேர்ந்த ஒரு பெண் மாவட்ட போலீஸ் அதிகாரியிடம் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். அதில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மாதா மாதம் கூட குளிப்பது இல்லை. சுத்தமாக இருப்பதில்லை என் அதில் கூறி உள்ளார். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்ட் ரவி சங்கர் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
இது குறித்து ரவிசங்கர் கூறும் போது, "கணவர் மாதத்திற்கு ஒரு முறை கூட குளிப்பது இல்லை எனவும் சுத்தமாக இருங்கள் என கூறிய மனைவிக்கு கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார்.
அந்த பெண் அவரது குடும்பத்தினரிடம் சுகாதாரத்தை பரமாரிக்க கேட்டு கொண்டு உள்ளார். ஆனால் அவர்கள் அதை புறக்கணித்து வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இருந்து உள்ளனர். மேலும் அவர்கள் அந்த பெண்ணை அவமானப்படுத்தி உள்ளனர் என கூறினார்.
மேலும் அந்த பெண் கூறும் போது, "தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டு தீபாவளிக்கு குளித்தனர். பின்னர் 5 மாதம் கழித்து தற்போது ஹோலி பண்டிகைக்கு குளித்து உள்ளனர்" என கூறி உள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த போலீஸ் சூப்பிரெண்ட் ரவி சங்கர் இந்த புகாரை பெண்கள் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் வினோதத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.