"உங்களை யாரும் பலாத்காரம் செய்யலியே அப்புறம் ஏன் அதையே கேக்குறீங்க"? நிருபர்கள் மீது பாய்ந்த அகிலேஷ்

Subscribe to Oneindia Tamil

லக்னொ: "நீங்கல்லாம் பாதுகாப்பாதானே இருக்கீங்க, அப்புறம் உங்களுக்கு என்ன கவலை பாலியல் பலாத்காரத்தை பற்றி" என்று பத்திரிகையாளர்களை பார்த்து எரிந்து விழுந்தார் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.

Why are you bothered about rape cases? Akhilesh asks media

உத்தரபிரதேசத்தில் தினம் ஒரு பாலியல் பலாத்காரமாவது நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று, சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டுப்போன உ.பி.யில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன்சமாஜ் தலைவி மாயாவதி கோரிக்கைவிடுக்கும் அளவுக்கு அங்கு நிலைமை மோசம்.

இந்நிலையில் தலைநகர் லக்னொவில் இன்று முதல்வர் அகிலேஷ் யாதவிடம் தொடரும் பாலியல் பலாத்கார பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அவர் கோபமடைந்தார். "நீங்கள் (பத்திரிகையாளர்கள்) ஏதாவது பிரச்சினையை அனுபவிக்கிறீர்களா? நீங்கள் பாதுகாப்பாகத்தான் உள்ளீர்கள். அப்புறம் எதற்காக கவலைப்படுகிறீர்கள்?" என்று ஆத்திரத்தில் பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், எந்த மாநிலத்தைவிடவும் சிறப்பான காவல் துறை கட்டுப்பாட்டு அறை உத்தரபிரதேசத்தில் உள்ளது. ஆபத்து என்று அழைப்பு வந்தாலே போதும் உடனே போலீசார் அங்கு இருப்பார்கள் என்று கூறிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டு நடையை கட்டினார் அகிலேஷ் யாதவ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+