அணு மின் உற்பத்தியில் இந்தியா முன்னணி.. கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் ஏன்?
Recommended Video
டெல்லி: தோரியம் மூலப்பொருளை கொண்டு அணுமின் உற்பத்தியில் இந்தியா முன்னணி வகித்து வருவதால் இது தொடர்பான தகவல்களை திருடவே கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகள் ஹேக்கிங் செய்யப்பட்டுவிட்டன. இதனால் இங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சைபர் தாக்குதல் வடகொரியா ஹேக்கர்கள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக தென்கொரியா ஆதாரங்களுடன் வடகொரியாவின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளது.

சைபர் தாக்குதல்
தென் கொரியா முன் வைத்த ஆதாரத்தில் தோரியம் மூலப்பொருள் குறித்து முக்கியமாக பேசப்பட்டுள்ளது. அதாவது தோரியம் மூலப்பொருளை கொண்டு அணு மின் தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது. இதனால் அந்த ரகசியத்தை திருடவே இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா
யுரேனியம், தோரியம் உள்ளிட்ட பொருள்களை வைத்துதான் அணுக்கரு உலைகளில் மின்னாற்றல் உருவாக்க முடிகிறது. யுரேனியத்தின் முக்கிய பொதுமக்களின் பயன்பாடானது அணுசக்தி நிலையங்களில் வெப்ப ஆற்றல் மூலமாக உள்ளது. உலகில் அதிக அணு உலைகளை கொண்ட நாடு அமெரிக்காதான். இங்கு 440 அணு உலைகள் உள்ளன. இதற்கடுத்த இடத்தில் பிரான்ஸ், ஜப்பான் ஆகியன உள்ளன.

மின்சாரம்
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் அணு உலைகள் காணப்படுகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தோரியம் அதிக அளவில் கையிருப்பு உள்ளது. இவற்றை கொண்டு அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

அணுக்கழிவு
தோரியம் மூலப்பொருளை அணு உலைகளில் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். இது யுரேனியத்தை காட்டிலும் 3 மடங்கு இயற்கையாகவே கிடைக்கப்படுகிறது. கேரளம், ஜார்க்கண்ட், பீகார், தமிழகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தோரியம் கிடைக்கிறது. தோரியம் உலைகளால் வெளியிடப்படும் அணுக்கழிவு குறைவானதாகும்.

இந்தியா
அது போல் அதில் கதிரியக்கத் தன்மையும் குறைவானதாகும். இதனால்தான் இந்தியா தோரியம் உலைகளை அதிகம் பயன்படுத்துகிறது. மேலும் மற்ற நாடுகளிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்வதை காட்டிலும் இயற்கையாக கிடைக்கும் தோரியத்தை மூலப்பொருளாக வைத்து மின் உற்பத்தியில் இந்தியா ஈடுபடுகிறது. எனவே தோரியம் மூலப்பொருளை கொண்டு அணு மின் உற்பத்தி குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவே கூடங்குளம் அணுமின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications