பாஜக 100 இடங்களுக்கு மேல் வென்றால்.. தொழிலை விட்டுவிடுகிறேன் - பிரஷாந்த் கிஷோர் சவால்
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 100 இடங்களுக்கு மேல் பாஜக வென்றால் நான் எனது தொழிலையே விட்டுவிடுகிறேன் என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஐந்தும் மாநில சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் வியூகங்கள் வகுத்து கொடுக்கும் பணியை பிரஷாந்த் கிஷோர் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், என்ன கடுப்பில் இருந்தாரோ தெரியவில்லை, இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு பிரஷாந்த் கிஷோர் காரசாரமாக பேட்டி அளித்துள்ளார்.

வேறு வேலைக்கு செல்வேன்
அதில், "மேற்கு வங்கத்தில் பாஜக 100 இடங்களுக்கு மேல் வென்றால் நான் இந்த தொழிலையே விட்டு விடுகிறேன். ஐபேக்கையே விட்டு விலகி விடுகிறேன். நான் வேறு ஏதாவது வேலைக்குச் செல்கிறேன். கண்டிப்பாக இந்த வேலையை செய்ய மாட்டேன்.

தகுதியானவன் அல்ல
உ.பி.யில் நான் தோற்றேன். காரணம் அங்கு நாங்கள் என்ன செய்ய விரும்பினோமோ அதைச் செய்ய முடியவில்லை. ஆனால் மேற்குவங்கத்தில் இந்த சாக்குப்போக்கு சொல்லும் வாய்ப்பே கிடையாது. தீதி (முதல்வர் மம்தா பானர்ஜி) எனக்கு நிறைய சுதந்திரம் அளித்துள்ளார். ஒருவேளை மேற்கு வங்க தேர்தலில் தோற்றால், நான் இந்த வேலைக்கு தகுதியானவன் அல்ல என்று விலகி விடுகிறேன்.

அதற்கு வரவில்லை
திரிணாமூல் காங்கிரஸ் அதன் மீதுள்ள பாரம் தாங்காமல் வீழ்ந்தால் தான் பாஜக வெல்ல முடியும். திரிணாமூல் காங்கிரஸில் சில உட்கட்சி பூசல்கள் உள்ளன. பாஜக, அந்த கோஷ்டி மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதில் கில்லாடியாகும். நான் இங்கு நண்பர்களைச் சம்பாதிக்க வரவில்லை. நான் கட்சியை வெற்றிப் பெற வைக்கவே இங்கிருக்கிறேன். இதற்காக நான் பணியாற்றும் போது சில கோஷ்டிகள் அவர்களைப் புறக்கணிப்பதாக கருதுகிறது. இதை தவிர்க்க முடியாது.

மோடிக்கு கூட்டம்
பாஜகவும் அமித் ஷாவும் 200 இடங்களில் வெல்வோம் என்கின்றனர், ஆனால் இது திரிணாமூல் கட்சியினரிடம் பதற்றத்தை அதிகரிக்கும் யுக்தி தான். வெறும் கூச்சல் போட்டால் மட்டும் தேர்தலில் ஜெயித்து விட முடியாது. பாஜகவின் சில கூட்டங்களில் 200-300 பேர் கூட வருவதில்லை, மோடி கூட்டத்துக்கு மட்டும்தான் அதிகளவில் கூட்டம் சேருகிறது" என்று தெரிவித்துள்ளார். 2014 மக்களவை தேர்தலில், பாஜக ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் பிரஷாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications