பஞ்சாபில் தலித் பெண்ணை ஆபீஸில் இருந்து வெளியே இழுத்து வந்து, கடத்தி பலாத்காரம்
சன்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் 24 வயது பெண்ணை அவர் வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் மையத்தில் இருந்து தரதரவென இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்த்சர் பகுதியை சேர்ந்தவர் குர்ஜிந்தர். அவர் அதே பகுதியை சேர்ந்த 24 வயது தலித் பெண் மீது ஆசை கொண்டுள்ளார். இதையடுத்து அவர் கடந்த மாதம் 25ம் தேதி அந்த பெண் வேலைபார்க்கும் கம்ப்யூட்டர் மையத்திற்கு சென்றார்.

அங்கிருந்த அந்த பெண்ணை அவர் அனைவர் முன்பும் தரதரவென வெளியே இழுத்து வந்தார். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பெண் உதவி கேட்டு அலறியும் யாரும் உதவி செய்யவில்லை.
இதையடுத்து குர்ஜிந்தர் அந்த பெண்ணை கடத்திச் சென்று பண்ணை வீடு ஒன்றில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து மறுநாள் விடுவித்தார். இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் கழித்து தான் அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் குர்ஜிந்தர் இன்று காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications