குர்கானில் நடந்த "ரோமியோ" வேட்டையில் 53 பேர் கைது.. 3 பெண்களும் சிக்கினர்!
குர்கான்: ஹரியானா மாநிலம் குர்கானில் முக்கிய சாலை ஒன்றில் பெண்களை கிண்டல் செய்தல் உள்ளிட்ட தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.
குர்கானில் உள்ள மெக்ராலி - குர்கான் சாலையில் (எம்.ஜி. சாலை) பல முக்கிய ஷாப்பிங் மால்கள் மற்றும் நைட் கிளப்புகள் அமைந்துள்ளன. எனவே எப்போதும் இந்த சாலை பெண்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாகக் காணப்படும்.

இதனைப் பயன்படுத்தி பெண்களைச் சிலர் ஈவ்டீசிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனவே, அத்தகையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையாக ரோமியோ ப்ரீ குர்கான் என்ற ஆபரேஷனை குர்கான் போலீசார் நடத்தி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமையன்று இதே சாலையில் நடந்த அந்த ஆபரேஷனில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 21 பேர் பெண்கள் ஆவர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் அந்த ஆபரேஷனை குர்கான் போலீசார் மேற்கொண்டனர். இதில், 3 பெண்கள் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஏசிபி தர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப்பகுதியில் விபச்சாரம், குடித்து விட்டு வண்டி ஓட்டுவதால் விபத்துக்கள், சண்டை உள்ளிட்டவை நடப்பதாக தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
அதோடு, இந்த எம்.ஜி. சாலையை பாதுகாப்பானதாகவும், பயமில்லாததாகவும் மாற்றுவதற்காகவே இந்த ரோமியோ ப்ரீ குர்கான் ஆபரேஷன் நடத்தி வருவதாகவும் தர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications