பெண்களும் 'முத்தலாக்' சொல்லாம்... உச்சநீதிமன்றத்தில் இந்திய முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம் உறுதி
இஸ்லாமிய பெண்களும் மூன்று முறை தலாக் சொல்லி விவகாரத்துப் பெறலாம் என்று இந்திய முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம் உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
டெல்லி: இஸ்லாமியர்களில் இனி 'ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்ய நாங்கள் அனுமதிக்கிறோம்,' என்று, இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.
இந்தியாவில், முத்தலாக் முறையை ரத்து செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதேசமயம், இதனை எதிர்த்து, இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன்மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, இதனை விசாரித்து வருகிறது. இதில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மற்றும் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் வழக்கறிஞர் இஜாஷ் மெக்பூல் ஆகியோர் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் நேற்றைய விசாரணையின்போது, இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் வழக்கறிஞர் இஜாஷ் மெக்பூல் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், "முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யும் வழக்கம், கடந்த 1400 ஆண்டுகளாக, முஸ்லீம் மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதை எப்படி இந்து மதத்தினர் நம்புகிறார்களோ, அதைப் போன்றே 'தலாக்' சொல்லி விவாகரத்து செய்வதை முஸ்லீம்களும் மரபாகப் பின்பற்றுகிறார்கள்.
'ஆண்கள் மட்டுமே, தலாக் சொல்லி விவாகரத்து செய்யலாம்' என எங்கள் சட்டம் சொல்லவில்லை. பெண்களும், திருமண உறவு பிடிக்காவிட்டால், தலாக் சொல்லி, விவாகரத்து செய்யலாம் என்றுதான் இந்திய முஸ்லீம்களுக்கான சட்டம் சொல்கிறது. இதனைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. பெண்களும், தலாக் சொல்லி, விவகாரத்து செய்வதை நாங்கள் அனுமதிக்கிறோம். இனிவரும் நாட்களில், இதனைப் பெண்கள் முழு அளவில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம்,'' என்று, இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய வழக்கறிஞர் இஜாஷ் மெக்பூல் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications