சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: ராஞ்சியில் அலை அலையாய் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. டெல்லி, லக்னோவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வெள்ளிக்கிழமை முதல் இப்போராட்டங்களை நடத்தி வந்தனர்.
Recommended Video
இவர்களை அப்புறப்படுத்த போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையாகின. கடும் குளிரிலும் போராட்டம் நடத்திய பெண்களின் உடைமைகள், உணவுப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த வீடியோக்கள் சர்ச்சையாக வெடித்தன.

ராஞ்சி போராட்டம்
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் சனிக்கிழமையன்று சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

குடும்பங்களாக பங்கேற்பு
சாதாரண கூலி தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், உயர் கல்வி படித்தவர்கள் என பல்வேறு தரப்பு பெண்களும் குடும்பம் குடும்பமாக சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை உறவினர்கள் வீடுகளில் விட்டுவிட்டு போராட்டத்தில் பெண்கள் பங்கேற்றனர்.

மாணவர்களும் பங்கேற்பு
தங்களுக்கு அன்றாட வருமானத்தை தரக் கூடிய கடைகளை அடைத்துவிட்டும் பெண்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆவணங்கள் ஏன்?
இது தொடர்பாக கருத்து தெரிவித்த போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், நாங்கள் இந்தியர்களாகவே வாழ்கிறோம். எதற்காக இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்களை காட்ட வேண்டும் என்று ஆவேசப்பட்டனர். மேலும் பிரதமர் மோடியை விட வாஜ்பாய் ஆட்சிக் காலம் நன்றாகவே இருந்தது எனவும் சுட்டிக்காட்டினர்.

சர்வாதிகார போக்கு
அத்துடன் மத்திய அரசின் சி.ஏ.ஏ. என்பது ஒரு கறுப்புச் சட்டம்; இச்சட்டத்துக்கு எதிராக இப்போது போராடாமல் நாங்கள் எப்போதுதான் போராடுவது? எனவும் ஆவேசத்தை காட்டினர். தற்போதைய சர்வாதிகார போக்கை தொடர நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications