"சீச்சீ... எனக்கு இந்த பழம் (அமைச்சர் பதவி) வேண்டாம்" என்கிறார் எடியூரப்பா
டெல்லி: கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று மோடியிடம் எடியூரப்பா கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக வெளிவராமல் எடியூரப்பாவுக்கு அமைச்சர் பதவி அளிக்க கூடாது என்று கட்சிக்குள் எதிர்ப்பு வலுப்பதால் அவர் தானாக முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஷிமோகா தொகுதியில் போட்டியிட்டு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அனுவபம், மக்கள் ஆதரவு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து எடியூரப்பாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது. அதற்கு முத்தாய்ப்பாய், டெல்லியில் மோடியை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் எடியூரப்பா தானாக முன்வந்து அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி தனது பிரச்சாரத்தின்போது ஊழருக்கு எதிராக முழு வீச்சில் பேசினார். இந்நிலையில் எடியூரப்பாவை அமைச்சரவையில் சேர்த்தால் அது எதிர்க்கட்சிகளால் மட்டுமின்றி, பாஜக தரப்பிலுமே விமர்சனங்களை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சிறிய அளவிலான அமைச்சரவையை உருவாக்க மோடி திட்டமிட்டுள்ளார். ஆனால் கர்நாடகாவில் இருந்து அனந்தகுமார், முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா ஆகியோரும் அமைச்சர் பதவிக்கான போட்டியிலுள்ளதால் யாருக்கு அமைச்சர் பதவியை அளிப்பது என்ற குழப்பம் மோடிக்கு.
இதனால் முதல்கட்ட அமைச்சரவை உருவாக்கத்தில் இருந்து விலகி இருந்துவிட்டு இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் அமைச்சரவையில் இணைய எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். அதற்குள் சில வழக்குகளில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்றும் அவர் கருதுகிறார். இதனால் அமைச்சர் பதவி வேண்டாம், உள்கட்சி பூசலால் உடைபட்டுப்போன கர்நாடக பாஜகவுக்கு புத்துயிர் கொடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளேன் என்று மோடியிடம் எடியூரப்பா கூறிவிட்டார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications