தமிழர்கள் கடும் உழைப்பாளிகள், நேர்மையானவர்கள்.... எடியூரப்பா புகழாரம்
ஷிமோகா: திருக்குறளில் உள்ள நல்ல கருத்துக்களை வட இந்திய மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம், ஷிமோகா, ஜே.எச்.படேல் நகரில் தமிழ்ச்சங்கம் சார்பில் ரூ.3 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையும், சமுதாய நலக்கூடமும் கட்டப்பட்டுள்ளது. இதை கர்நாடக மேலவை பாஜக எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா சிலையைத் திறந்து வைத்தார். விழாவை எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசுகையில், பெங்களூருவில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 18 ஆண்டுகளாக மூடியிருந்த திருவள்ளுவர் சிலையை நான் முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தேன். எனக்கு முன்பு பல முதல்வர்கள் இருந்தபோதும், அவர்கள் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தால் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில் திறக்காமல் இருந்தனர். ஆனால் எனக்கு அந்த பயம் கிடையாது.
இதேபோல, தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த சர்வக்ஞர் சிலையை அப்போதைய தமிழக முதல்வசர் கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அந்த சிலையை திறந்து வைத்தேன். இதன்மூலம் கன்னட-தமிழக மக்களின் உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
அதன்பிறகு கர்நாடகத்திற்கு வேலை தேடி வரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கர்நாடகத்திலும் தமிழ் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள் - நேர்மையானவர்கள்.
பதவி வரும், போகும். ஆனால் மனித நேயமும், உண்மையான உறவும் தான் கடைசி வரை நிலைத்து நிற்கும். பதவியில் இருப்பவர்கள் அனைத்து மக்களுக்கும் நடுநிலையாக செயல்பட்டு ஆட்சி நடத்தவேண்டும். அது தான் உண்மையான நல்லாட்சி ஆகும்.
திருவள்ளுவரின் புகழையும், திருக்குறளில் உள்ள நல்ல கருத்துகளையும் வட இந்திய மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் திருவள்ளுவர் தினத்தை கொண்டாட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி உத்தரவிட்டுள்ளார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications