யோகா தினம்: லக்னோவில் மழையை பொருட்படுத்தாது யோகியுடன் யோகா செய்த மோடி
லக்னோ: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி லக்னோவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தார்.
2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மூன்றாவது யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ராமாபாய் அம்பேத்கர் சபா ஸ்தலத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதிய்யநாத் மற்றும் 51 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா செய்தார்கள். பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
லக்னோவில் இன்று மழை பெய்தபோதும் அதை பொருட்படுத்தாமல் மோடி உள்ளிட்டோர் யோகா செய்தனர். அனைவரும் தினமும் யோகா செய்ய வேண்டும் என்று மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது