யோகா செய்வது நல்லது ஆனால் பூஜை செய்யாதீர்கள்… இஸ்லாமியர்களுக்கு அறிவுரை வழங்கிய தலைவர்!
லக்னோ: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலாக, இந்து மதம் சார்ந்த வழிபாடுகள் மட்டுமின்றி, நம்பிக்கை, யோகா பயிற்சி போன்றவற்றையும் மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில்,இஸ்லாமிய மக்கள் பின்பற்றிவரும் 'முத்தலாக்' முறையை ரத்து செய்யவும் மத்திய பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பெரும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், பாஜக உலகம் முழுவதும் பரப்பி வரும் யோகா பயிற்சி முறைக்கு ஆதரவாக, இஸ்லாமியர்களின் தலைவர் ஒருவர் குரல் கொடுத்துள்ளது, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியத்தின் உறுப்பினராக உள்ள மவுலானா காலித் ரஷித் ஃபராங்கி மஹாலி யோகாவை ஆதரித்து கருத்துக் கூறியுள்ளார். இவர், சன்னி பிரிவு மக்களின் மதத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி ஒன்றில் மவுலானா காலித் பேசும்போது, இவ்வாறு பேசியுள்ளார். யோகா பயிற்சி செய்வது, முஸ்லீம் மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் உடல்நலம் அளிக்கும் என்று கூறிய அவர், முஸ்லீம் மக்கள் பூஜை செய்வதுதான் தவறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, 55,000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட யோகா பயிற்சி நிகழ்வு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த நிகழ்வில், முஸ்லீம்கள் 300 பேரும் பங்கேற்பார்கள் என்றும், இதற்கான பயிற்சி வழங்கும் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மவுலானா காலித் தெரிவித்துள்ளார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications