போலீஸ் ஸ்டேஷனுக்கு விசிட் அடிக்கும் சி.எம்.. துடைப்பத்தால் பெருக்கும் அமைச்சர்.. கண்ணு வேர்க்குதே
லக்னோவின், ஹஜ்ராத்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், கைதிகள் அடைக்கப்படும் அறைகள் மற்றும் வசதிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்.
டெல்லி: உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ஆய்வு நடத்தியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீரமைப்பதில் எந்த வித சமரசமும் கிடையாது என்று அவர் காவல்துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசியாபாத், மீரட், நொய்டா, லக்னோ ஆகிய நகரங்களில் பணியில் இருந்த காவல்துறையினரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட முதல்வர், நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ளார்.

தலைநகரில் ஆய்வு
லக்னோவின் பஜார் பகுதியான, ஹஜ்ராத்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு நடைபெற்றது. அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள், கைதிகள் அடைக்கப்படும் அறைகள் மற்றும் வசதிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்.

எச்சரித்த முதல்வர்
காவல் நிலையம் முழுவதும் சுற்றி ஆய்வு செய்த பின், முதல்வர் ஆதித்யநாத் கூறுகையில், ''மாநிலத்தில், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதுதான் என் முதல் பணி. அதற்காக, எந்த நடவடிக்கையும் எடுக்க, அரசு தயங்காது" என்றார்.

குப்பை சுத்தம்
இது ஒருபுறம் என்றால், அமைச்சர்களும் முழு வீச்சில் பணியை தொடங்கிவிட்டனர். அமைச்சர் உபேந்திர திவாரி, நேற்று காலை, தன் அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கு குப்பை சரியாக சுத்தம் செய்யப்படவில்லை. எனவே, அமைச்சர் தானே துடைப்பத்தை எடுத்து, சுத்தம் செய்ய துவங்கினார். இதை பார்த்த அதிகாரிகளும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்து ஸ்தம்பித்து நின்றனர்.
இதன்பின், அலுவலக உதவியாளர், அமைச்சரின் கையிலிருந்து துடைப்பத்தை வாங்கி, அலுவலகத்தை சுத்தம் செய்தார்.

பான் மசாலா தடை
அரசு அலுவலகங்களில் வெற்றி பாக்குபோடுவது, பான் மசாலாக்கள் சுவைப்பது போன்றவற்றில் ஊழியர்கள் ஈடுபட கூடாது என்று யோகி ஆதித்யநாத் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications