உயிரைக் கொடுக்கத்தயார்: கேஜ்ரிவால் முன்பு ரத்தம் சிந்திய இளைஞர்
டெல்லி: மக்கள் தர்பார் கூட்டத்தில் கேஜ்ரிவால் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கை மணிக்கட்டை கிழித்துக் கொண்டு உங்களுக்காக உயிரைக் கொடுக்கத் தயார் என்று கூறினார்.
டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அம்மாநில முதல்வராக கேஜ்ரிவால் சனிக்கிழமை பதவியேற்க உள்ளார்.
அதற்கு முன்பாக மக்களை சந்தித்து குறைகேட்டு வருகிறார்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட டியோலியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் ஜமீல் அகமது, கேஜ்ரிவால் முன் திடீரென தனது மணிக்கட்டை பிளேடால் கிழித்துக்கொண்டார்.
அப்போது பேசிய அந்த இளைஞர், விடுதலைப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திர போஸ் "ரத்தத்தை கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கிறேன்" என்று கூறியிருந்ததை நினைவுபடுத்தினார். அது போல் உங்களுக்காக நான் எதுவும் செய்ய தயார். என் உயிரையும் கொடுக்க தயார் என கேஜ்ரிவாலிடம் கூறினார்.
தனது ஆதரவாளர்களை அழைத்து, உடனடியாக அகமதுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிக்கும்படி கூறினார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அகமது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications