அட்ரா நம்ம கட்சி கலரை.. அடங்காத ஜெகன் மோகன் ரெட்டி.. குவியும் கண்டனங்கள்!
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் அரசு கட்டிடங்களுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொடி வண்ணம் பூச அரசாணை பிறப்பித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களில் பலர் தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளபோது அரசு நிதியை கொண்டு கட்சியை வளர்ப்பதில் கில்லாடிகளாக இருந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக இருந்தபோது தனது கட்சி சின்னமான யானையின் சிலையை ஊரெங்கும், தெருவெங்கும் நிறுவினார். பின்னர் அதற்காக உச்சநீதிமன்றத்தில் அவர் குட்டு வாங்கியதெல்லாம் தனிக்கதை.
தமிழகத்திலும் இது போன்ற செயல்களுக்கு விதி விலக்கு இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பில் அரசு நிதியில் இரட்டை இலை சின்னத்தை பிரமாண்டமாக வடிவமைத்து நிறுவினார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்தது. ஆம், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருப்பது இரட்டை இலை சின்னமே அல்ல என்றும், பறக்கும் குதிரையின் இறகுகள் எனவும் விநோத பதில் தரப்பட்டு சமாளிக்கப்பட்டது.
இந்த வரிசையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் இப்போது இணைந்து விடுவார் போல் தெரிகிறது. ஆந்திரா முழுவதும் கிராமச் செயலகங்கள் அக்.2 முதல் தொடங்கப்படுகின்றன. அதற்காக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொடி வண்ணம் பூச ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் கிரிஜா சங்ககர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான மாதிரி படத்தையும் வெளியிட்டதால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பாஜக, தெலுங்கு தேசம் கட்சியினர் வாளை சுழற்றத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் லால் தினகரன், மக்கள் வரிப்பணத்தை ஜெகன் தவறாக பயன்படுத்துவதாகவும், கண்டனத்திற்குரிய செயல் எனவும் கடுகடுத்துள்ளார். நாயுடுவும் இதை வைத்து போராட்டம் நடத்தும் திட்டத்தில் உள்ளார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications