லிபியா: மத்திய தரை கடலில் அகதிகளுடன் சென்ற படகு மூழ்கியது- 100 க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்

Subscribe to Oneindia Tamil

திரிபோலி: லிபியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மத்திய த்ரைகக்டலில் மூழ்கியது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லிபியாவில் அதிபராக இருந்த கடாபி படுகொலைக்குப் பின்னர் அரசியல் குழப்பங்கள் தொடருகின்றன. இதனையடுத்து லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக படகுகள் மூலமாக ஐரோப்பிய கடற்கரை பகுதிக்கு அடைக்கலம் கோரி பல்லாயிரக்கணக்கில் வெளியேறி உள்ளனர்.

100 refugees feared dead as boat capsizes off Libya

ஆனால் மத்திய தரைக் கடலில் இந்த அகதிகள் மேற்கொள்ளும் பயணங்கள் பெரும்பாலும் விபத்தில்தான் முடிந்துள்ளன. இதுவரை 1,000க்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் லிபியா தலைநகர் திரிபோலிக்கு வடகிழக்கே 130 அகதிகளுடன் சென்ற ரப்பர் படகு கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஓசன் வைக்கிங் என்ற மீட்பு கப்பல் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. கடலில் மூழ்கிய ரப்பர் படகின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை சடலங்கள்தான் கிடைத்து கொண்டிருக்கின்றன.. ஆனால் உயிர் பிழைத்தவர்கள் எவரும் மீட்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+