பலத்த சத்தத்துடன் நள்ளிரவில் பூஜை... குவைத்தில் 11 இந்தியர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

குவைத்: குவைத்தில் நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் பூஜை செய்ததாக 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் குவைத்தில் நவசைதன்யா நல சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த சத்யநாராயணா பூஜை நடைபெற்றது. இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

11 Indians held in Kuwait for holding 'noisy' puja

குவைத்தின் மையப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த பூஜை நடத்தப்பட்டது. நள்ளிரவை தாண்டியும் நடந்த பூஜையில், பக்தர்கள் பலத்த சத்தத்துடன் பஜனை பாடல்களை பாடியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த அக்கம்பக்கத்தார், இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், பூஜையில் ஈடுபட்ட 11 இந்தியர்களைக் கைது செய்தனர்.

குவைத் சட்டப்படி எந்த வழக்கில் கைது செய்தாலும் அவர்களை 10 நாளில் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் 15 நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் இன்னும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவில்லை.

இதுகுறித்து உடுப்பி- சிக்மகளூரு தொகுதி எம்.பி. ஷோபா சரன் தலாஜி குவைத்தில் உள்ள இந்திய தூதர் ஜெயினுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் அவர்களை விடுதலை செய்யும்படி மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+