உச்சத்தில் உக்ரைன் போர்! ரஷ்ய தாக்குதலில் 113 சர்ச், 200 புராதான சின்னங்கள் அழிப்பு! ‛பகீர்’ தகவல்
கீவ்: ரஷ்யாவின் போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்துள்ள நிலையில் 113 தேவாலயங்கள், 200 பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய படைகள் தொடரச்சியாக உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ் இன்னும் ரஷ்யாவுக்கு எட்டாக்கனியாக இருப்பது தான் போர் 100 நாட்களை தாண்டியும் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும்.

போர் குற்றம் புரிகிறதா ரஷ்யா?
இந்நிலையில் தான் ரஷ்யா மீதும், ரஷ்ய படையினர் மீதும் உக்ரைன் தரப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் படையானது பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் மீது குண்டுவீசுகிறது. படை வீரர்கள் உக்ரைன் பெண்களை மிரட்டில் வன்புணர்வு செய்கின்றனர் என தொடர்ச்சியாக குற்றங்களை சுமர்த்தி வருகிறது.

உக்ரைன் அதிபர் பேச்சு
மேலும் உக்ரைனின் நிலை பற்றி அடிக்கடி அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி மூலம் பேசி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது உரையாற்றினார். அதில் அவர் ரஷ்யா மீதும் மீண்டும் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுபற்றி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:

113 தேவாலயங்கள் அழிப்பு
உக்ரைனில் இதுவரை தேவாலயங்கள், பாரம்பரிய சின்னங்கள் என 300க்கும் அதிகமானவை சேதப்படுத்தப்பட்டு ள்ளன. குறிப்பாக ரஷ்ய பீரங்கிகள் நாடு முழுவதும் 200 பாரம்பரிய இடங்களையும், 113க்கும் மேற்பட்ட தேவாலயங்களையும் அழித்துள்ளன. அழிக்கப்பட்டுள்ள டஜன் கணக்கான தேவாயலங்கள் 2ம் உலகப்போரில் நாஜி படைகளை எதிர்த்து நின்ற பெருமை கொண்டவையாகும். 2ம் உலக போரை கூட தாங்கிய தேவாலங்களால் ரஷ்யாவின் தாக்குதலை தாங்கி நிற்க முடியவில்லை. இது துரதிர்ஷ்டமானது. மிகவும் கொடுமையானது'' என வருத்தம் தெரிவித்துள்ளார்.

தீப்பற்றி எரியும் மடாலயம்
மேலும், கிழக்கு உக்ரைனில் ஸ்வியாடோகிர்ஸ்க் லாவ்ராவில் உள்ள பழமையான மடாலயம் தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 300 அகதிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், 60 குழந்தைகள் உள்ளிட்டோர் தங்கி இருந்த நிலையில் அது தீப்பற்றி எரிந்தது. இதற்கும் ரஷ்ய படைகளின் தாக்குதல் தான் காரணம் எனக்கூறி உக்ரைன் ராணுவ அதிகாரி யூரி கோசேவெங்கோ 'பேஸ்புக்' பதிவில் தெரிவித்துள்ளார். அதோடு மடாலயத்தின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications