10th ரிசல்டில் அறந்தாங்கி நிஷா மகன் மதிப்பெண் இவ்வளவுதானா! ஆனாலும் அவர் சொன்ன விஷயம் ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிகாலை முதலே தேர்வு முடிவுகளை பார்க்க மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், பல பிரபலங்களும் தங்கள் குழந்தைகளின் தேர்வு முடிவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Aranthangi Nisha 10th Result Tamil Nadu SSLC Result Vijay TV

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

அந்த வகையில், விஜய் டிவி மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் கலக்கி வரும் அறந்தாங்கி நிஷா, தனது மகன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை தரும் விதமாக அவர் பேசியிருக்கும் வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அறந்தாங்கி நிஷா, தனது வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து இன்று தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். நகைச்சுவை மட்டுமல்லாமல் எமோஷனலான பத்தாம் வகுப்பு தேர்வு விஷயங்களிலும் மனதில் பட்டதை நேராக பேசக்கூடியவர் என்ற பெயரும் அவருக்கு இருக்கிறது.

அறந்தாங்கி நிஷா மகன் மதிப்பெண்

இந்த நிலையில், ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்து வந்த தனது மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் 322 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியபோது, "நேற்று இரவு முதலே எல்லா பெற்றோர்களைப் போல நானும் ஒரு பயத்துடன்தான் இருந்தேன். என்ன முடிவு வரும் என்று காத்திருந்தேன். இப்போது என்னுடைய மகன் 322 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். இந்த மதிப்பெண் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது" என்று கூறியிருக்கிறார்.

அறந்தாங்கி நிஷா சொன்ன விஷயம்

ஆனால் அதைவிட பலரது கவனத்தை ஈர்த்தது அவர் மாணவர்களுக்காக சொன்ன ஆறுதல் வார்த்தைகள்தான். "எந்த மதிப்பெண் கிடைத்தாலும் அது அடுத்த கட்டத்திற்கு போவதற்கான ஒரு படிக்கட்டு மட்டும்தான். இந்த ஒரு தேர்வே உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யும் என்று நினைக்க வேண்டாம். பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தால், பன்னிரண்டாம் வகுப்பில் இன்னும் அதிகமாக எடுக்க முயற்சி செய்யுங்கள். அதிக மதிப்பெண் எடுத்திருந்தால் அதைவிட இன்னும் சிறப்பாக வர முயற்சி செய்யுங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

அதோடு, "மதிப்பெண் குறைந்துவிட்டதால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்கக்கூடாது. வாழ்க்கையில் திறமை இருந்தால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எளிதாக செல்ல முடியும். எந்த காரணத்திற்காகவும் மனம் உடையாதீர்கள். கவலைப்படாதீர்கள்" என்று மாணவர்களுக்கு தைரியம் கொடுத்துள்ளார்.

பொதுவாக தேர்வு முடிவு நாளில் அதிக அழுத்தத்தில் இருப்பது மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும் தான். அந்த உணர்வை மிகவும் இயல்பாக பகிர்ந்திருக்கும் அறந்தாங்கி நிஷாவின் இந்த பதிவு பலரையும் கவர்ந்திருக்கிறது.

சமீப காலமாக தேர்வு முடிவுகள் வெளியானதும் சில மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சம்பவங்கள் நடப்பதால், அறந்தாங்கி நிஷா போன்ற பிரபலங்கள் இப்படி தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் பேசுவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இன்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பல மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கும் இந்த வார்த்தைகள் பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது.

"மதிப்பெண் முக்கியம் தான்... ஆனால் அதைவிட முக்கியம் வாழ்க்கை" என்ற கருத்துடன் பலரும் அறந்தாங்கி நிஷாவின் பதிவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+