இருளில் மூழ்கிய வெனிசுலா.. டயாலிசிஸ் செய்ய முடியாமல் 15 சிறுநீரக நோயாளிகள் பலியான பரிதாபம்
வெனிசுலாவில் கடும் மின் தட்டுப்பாடு காரணமாக டயாலிசிஸ் செய்ய முடியாமல் 15 சிறுநீரக நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
கராகஸ்: அரசியல் பிரச்சினையால் கடும் மின் தட்டுப்பாட்டில் தவித்து வரும் வெனிசுலாவில், உரிய நேரத்தில் டயாலிசிஸ் செய்ய முடியாததால் 15 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா, எண்ணெய் வளம் மிக்க நாடு. தற்போது அந்நாட்டின் அதிபராக இருக்கும் நிகோலஸ் மதுரோ மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போதே, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தான் பதவியேற்றார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டின.

இந்நிலையில் அங்கு தற்போது அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஜுயான் கொய்டோ தன்னை அந்நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்து கொண்டார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
இதனால் வெனிசுலாவில் அரசியல் குழப்பமான சூழல் நிலவுகிறது. அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையும் விதித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடும், கடும் மின் தட்டுப்பாடும் அங்கு நிலவுகிறது.
அந்நாட்டின் மேற்கு மாகாணங்களான பரினாஸ், தசீரா, ஷூலியா உள்ளிட்ட பகுதிகள் மின்சாரம் இல்லாததால், இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. கராகஸ், மிராண்டா, வர்காஸ் ஆகிய மாகாணங்களில் மின்சாரம் விட்டுவிட்டு வருகிறது. மின் தட்டுப்பாட்டின் காரணமாக அங்குள்ள சர்வதேச விமான நிலையங்கள், உள்ளூர் மெயின் விமான நிலையங்கள் போன்றவையும் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் இயல்பு வாழ்க்கை வாழ இயலாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த கடும் மின் தட்டுப்பாட்டினால் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுவரை டயாலிசிஸ் சிகிச்சை பெற முடியாமல் சுமார் 15க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அங்கு சுமார் 10,200-க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதால், மின் தட்டுப்பாட்டினால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications