கோலாலம்பூரில் தவித்த 170 தமிழக மாணவர்கள் இந்தியா திரும்பினர்- விசாகப்பட்டினத்தில் கண்காணிப்பு
விசாகப்பட்டினம்: கோலாலம்பூரில் தவித்து வந்த 170 தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலில் இந்த மாணவர்கள் தாயகம் திரும்ப முயன்றனர்.

ஆனால் உரிய விமான வசதியின்றி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே 170 மாணவர்களும் தவித்து வந்தனர். இவர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து 170 தமிழக மாணவர்களையும் மீட்க இந்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தது. இந்த மாணவர்கள் அனைவரும் இன்று ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் வந்தடைந்தனர்.
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்காணிப்பு மையங்களுக்கு 170 மாணவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 14 நாட்கள் கண்காணிப்புக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு இல்லாத மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப அனுமதிக்கப்படுவர்.
இதனிடையே எஞ்சியுள்ள 130 மாணவர்களும் நாளை இந்தியாவுக்கு அழைத்துவரப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications