உலகில் 30 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்: அதில் பாதி பேர் இந்தியாவில்
லண்டன்: உலகில் 30 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளார்களாம். அதில் பாதி பேர் இந்தியாவில் தான் உள்ளனர் என்று கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
வாக் ப்ரீ பவுன்டேஷன் 162 நாடுகளில் கொத்தடிமைகளாக உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. இதில் உலகம் முழுவதும் 29.8 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.
எந்தெந்த நாடுகளில் கொத்தடிமைத்தனம் அதிகம் என்று பார்ப்போம்.

இந்தியாவில் தான் பாதி கொத்தடிமைகள்
உலக அளவில் 29.8 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக இருந்தாலும் அதில் பாதி பேர் இந்தியாவில் தான் உள்ளார்களாம். அதாவது இந்தியாவில் 14 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளார்களாம். சீனாவில் 3 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளார்களாம்.

10 நாடுகளில்
உலக கொத்தடிமைகளில் 76 சதவீதம் பேர் இந்தியா, சீனா, பாகிஸ்தான், நைஜீரியா, எதியோபியா, ரஷ்யா, தாய்லாந்து, காங்கோ, மியான்மர் மற்றும் வங்க தேசம் ஆகிய 10 நாடுகளில் உள்ளார்களாம்.

கொத்தடிமைத்தனம்
தற்போது கொத்தடிமைத்தனம் என்றால் மக்களை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது, கொத்தடிமைகளாக வேலை செய்ய வைப்பது, கடன் தீரும் வரை வேலை வாங்குவது, குழந்தைகளை கடத்தி வேலை வாங்குவது உள்ளிட்டவை ஆகும்.

மொரிஷியானா
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொரிஷியானா நாட்டில் மொத்தமுள்ள 3.8 மில்லியன் பேரில் 160,000 பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்.

இந்தியாவின் பிரச்சனை
இந்தியாவில் கடன் மற்றும் கொத்தடிமைகளாக வேலை செய்வது தான் பலர் அடிமைகளாக இருக்க காரணம்.

இங்கிலாந்து
ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் குறைவான எண்ணிக்கையில் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளனர். இங்கிலாந்தில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 4,400 பேர் கொத்தடிமைகளாக உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications