உ.பி.யில் மர்மம்! கட்டிலின் storage பெட்டியில் தம்பதி, 3 குழந்தைகள் என 5 பேரின் உடல்கள் கண்டெடுப்பு!
மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது. கணவன், மனைவி, அவர்களது 3 பெண் குழந்தைகள் என 5 பேரும் இறந்த நிலையில் படுக்கைக்கு கீழ் இருக்கும் ஸ்டோரேஜ் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டிருந்தனர்.
ரூர்கியில் புசானா கிராமத்தைச் சேர்ந்தவர் மொயின் (52). இவருக்கு ஹப்பூரை சேர்ந்த அஸ்மா (45) என்பவருடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களளுக்கு அக்ஷா (8), அசைசா (3), அலிஸ்பா (1) ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். கிராமத்தில் உள்ள நிலத்தை விற்ற காசை கொண்டு கடந்த ஓராண்டுக்கு முன்பு மொயின் ஒரு காலி மனையை வாங்கினார்.
தற்போது அங்கு ஒன்றரை மாதங்களாக வீடு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இவர்கள் மீரட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். இவர்களது வீட்டிற்கு மொயினின் அண்ணி வந்தாராம். அவர் கதவை தட்டிய போது கதவு தாழிடப்பட்டிருந்ததாம்.
மொயினுக்கும் அஸ்மாவுக்கும் போன் போட்டும் எடுக்கவில்லையாம். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீட்டின் மேற்கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே இறங்கினர். அப்போது வீடு முழுக்க தேடியும் கிடைக்கவில்லை.
அவர்களது படுக்கை அறையில் கட்டிலானது நகர்ந்து கிடந்தது. மேலும் அங்கிருந்து வாடையும் வந்தது. இதையடுத்து கட்டிலுக்கு அடியில் இருக்கும் சேமிப்பு அறையை திறந்து பார்த்த போது போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் மொயின் உள்பட 5 பேரும் பெட்ஷீட்டால் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கிடந்தனர். போலீஸார் 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மொயின்- அஸ்மாவின் 70 உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில் மொயினுக்கு வேறு ஒரு இடத்திலும் காலி மனை இருக்கிறது. அந்த இடத்தால் அவருக்கு உறவினர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை சந்தேகத்தின் பேரில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் ஒருவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரை போலீஸார் தேடி வருகிறார்கள். அந்த வீட்டில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அதை வைத்து குற்றவாளியை விரைந்து கண்டுபிடிப்போம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். ஒரு குடும்பத்தையே கருவறுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications