ஈராக்கில் குண்டுகள் நிரப்பிய டிரக்கை வெடிக்கச் செய்த ஐஎஸ் தீவிரவாதி: 51 பேர் பலி, 70 பேர் காயம்
பாக்தாத்: ஈராக்கின் பாபில் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 51 பேர் பலியாகியுள்ளனர், 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஈராக்கின் பாபில் மாகாணத்தில் இருக்கும் ஹில்லா நகரின் அல் அதார் பாதுகாப்பு சோதனைச் சாவடிக்கு ஞாயிற்றுக்கிழமை டிரக் ஒன்று வந்தது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த டிரக்கை நிறுத்தியபோது அதில் இருந்த நபர் தனது உடல் மற்றும் வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இதில் காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 23 பேர் பலியாகினர். மேலும் சோதனைச்சாவடியில் வரிசையாக காரில் காத்திருந்த பொது மக்கள் 28 பேர் பலியாகினர். சோதனைச்சாவடி பகுதியில் இருந்த 70 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் அந்த சோதனைச் சாவடியில் நின்று கொண்டிருந்த பல கார்கள் எரிந்து நாசமாகின. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 28ம் தேதி சதர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 78 பேர் பலியாகினர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சோதனைச்சாவடிகள், மார்க்கெட்டுகள், காபி கடைகள், மசூதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications