இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அலகில் 6.5 ஆக பதிவு
சுமத்ரா: இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.5 ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சுமத்ரா தீவின் பதாங் நகரின் தென் பகுதியிலிருந்து 155 கி.மீ., தொலைவில், 40 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறினர். நிலநடுக்க பாதிப்புகள் குறித்து தகவல்கள் தெரியவரவில்லை.
இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் , சிக்லாப் , பொங்கோல், தோபாயோ போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டதாகத் தகவல் வெளியானது.
அவை சில நிமிடங்களுக்கு நி இந்தோனேசியாவின் பாடாங் நகரிலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் ஐம்பது கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உயிர்சேதமோ பொருள்சேதமோ ஏதும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் ‘பசிபிக் நெருப்பு வட்டத்தில்' இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் உருவாகி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 2.8 லட்சம் பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.