புல்வாமா பாணியில் பயங்கரம்.. பாகிஸ்தான் போலீஸ் வேன் மீது தற்கொலை தாக்குதல்.. 9 போலீஸார் பலி
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள காம்ப்ரி பாலத்தில் வேன் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி வேனின் மீது வேகமாக பைக்கை மோதினான்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலீஸ் வேன் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் 9 போலீஸார் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.
ஏற்கனவே பஞ்சத்தாலும், வறுமையாலும் பாகிஸ்தான் மக்கள் நிலைக்குலைந்திருக்கும் சூழலில், இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களும் அங்கு அதிகரித்து வருகின்றன.
இதனிடையே, பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கக்கூடும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

வறட்சியும் அட்டூழியமும்
பாகிஸ்தானில் வரலாறு காரணாத பஞ்சமும், வறட்சியும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை உணவு கூட சாப்பிட முடியாத அவல நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசு முழுவதுமாக திவாலாகிவிட்ட நிலையில், ராணுவ வீரர்களுக்கு கூட உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பரிதாபகரமான சூழலில், பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கூட பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 101 பேர் உயிரிழந்தனர்.

போலீஸ் வேன்
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்கள் என அழைக்கப்படும் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கம் பொறுப்பேற்றது. இந்த சூழலில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மற்றொரு பயங்கர தாக்குதல் சம்பவத்தை தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். பலூசிஸ்தானின் போலான் பகுதியில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட போலீஸார் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

புல்வாமா பாணியில்..
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள காம்ப்ரி பாலத்தில் வேன் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி வேனின் மீது வேகமாக பைக்கை மோதினான். இதில் அடுத்த நொடியே சக்திவாய்ந்த குண்டு வெடித்து வேன் பல அடி தூரத்துக்கு தூக்கியெறியப்பட்டது. காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட பாணியில் இந்த தற்கொலை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் வேனில் இருந்த 9 போலீஸார் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் தலிபான்கள்
20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து காயமடைந்த போலீஸாரை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாத அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியிருக்கும் என பாகிஸ்தான் ராணுவம் சந்தேகிக்கிறது. இதுகுறித்து போலீஸார், ராணுவத்தினர் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications