முதல் குழந்தை பிறந்த 25 நாளில் இரட்டை குழந்தை... வங்கதேசத்தில் அதிசயம்
டாக்கா: வங்க தேசத்தில் முதல் குழந்தை பிறந்த 25 நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகளை ஒரு பெண் பெற்றுடுத்த சம்பவத்தால் மருத்துவர்கள் வியப்படைந்தனர்.
வங்க தேசத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜெஸ்ஸோரே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுல்தானா(20). இவருக்கு பிப்ரவரி மாத இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை மருத்துவர்கள் குறித்த காலத்துக்கு முன்பே பிறந்துவிட்டது.
இந்நிலையில 25 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 22ம் தேதி சுல்தானாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ஜெசோர் ஆத் தீன் மருத்துவமனைக்கு கொணடு சென்றனர்.

மருத்துவர்கள் பரிசோதனை
அங்கு சுல்தானாவை மருத்துவர் ஷீலா பொத்தார் பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது ஸ்கேன் பரிசோதனையும் செய்து பார்த்தார். அதில் சுல்தானாவுக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதை கண்டுபிடித்தார். ஏற்கனவே ஆண்குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பப்பையில் இரட்டை குழந்தை இருப்பதையும் கண்டறிந்தார்.

இரட்டை குழந்தைகள்
இதையடுத்து வியப்படைந்த மருத்துவர் ஷீலா பொத்தார், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தார். இதன்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சுல்தானாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன .

தாயும் சேயும் நலம்
முதல் குழந்தை பிறந்த 25 நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணை மருத்துவர்கள் நான்கு நாட்கள் சிகிச்சை அளித்து அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தாயும் குழந்தைகளும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள்.

மருத்துவர் பதில்
இரட்டை கர்ப்பப்பை ஒரு பெண்ணுக்கு இருப்பது அரிதான நிகழ்வாகும். இதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவர் ஷீலா பொத்தார், அந்த பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில், மற்றொரு கர்ப்பப்பையில் இரட்டை குழந்தைகள் இருப்பது முதலில் தெரியாது. தற்போது குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. எல்லாம் நன்றாக முடிந்துவிட்டது என்றார். இதனிடையே அந்த பெண் பிறக்கும் போதே இரட்டை கர்ப்பப்பையுடன் பிறந்திருக்கக்கூடும் என்றும், அதனால் தான் அவருக்கு இரட்டை கர்ப்பப்பை இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications