ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்பு
பாங்காக்: டெல்லியில் இருந்து 231 பயணிகளுடன் தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாங்காக் விமான நிலையத்தில் தனியாக நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
டெல்லியில் இருந்து ஏர் இந்தியா ஜெட்-332 என்ற விமானம் 231 பயணிகள் மற்றும் விமான பணியார்கள் 10 பேருடன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது. இதனையடுத்து பாங்காக் விமான நிலைய கண்காணிப்பாளர் ஏர் இந்தியா விமானத்தை, விமான நிலையத்தில் தனியாக நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து பாங்காக் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் மற்ற விமானங்கள் இருக்கும் இடத்தை விட்டு தனியே ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications