ரேடாரிலிருந்து திடீரென்று காணாமல் போன போர் விமானம்.. 38 பேர் நிலை என்ன? சிலியில் பகீர்!
சிலி நாட்டின் போர் விமானம் ஒன்று அண்டார்டிகா கடல் அருகே இன்று அதிகாலை மாயமான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாண்டியாகோ: சிலி நாட்டின் போர் விமானம் ஒன்று அண்டார்டிகா கடல் அருகே இன்று அதிகாலை மாயமான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானத்தில் 38 பேர் பயணித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடுதான் சிலி. எல்லை பிரச்சனை மற்றும் கடல் கொள்ளையர்கள் தொல்லை காரணமாக இந்த நாடு ராணுவத்திலும் விமான படையிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.
அண்டார்டிகா பகுதியில் சிலி நாட்டு விமானங்கள் அடிக்கடி போர் பயிற்சி செய்யும். அதேபோல் கிங் ஜார்ஜ் தீவு எனப்படும் அண்டார்டிகாவின் சிறிய தீவிலும் இவர்கள் பயிற்சிகளை செய்வது வழக்கம்.

என்ன நடந்தது
இந்த நிலையில் இன்று அதிகாலை சாண்டியாகோவில் இருந்து கிங் ஜார்ஜ் தீவு சென்ற சிலி நாட்டின் போர் விமானம் மாயமானது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.55 மணிக்கு புறப்பட்ட விமானம், 6.13 மணிக்கு ரேடாரில் இருந்து காணாமல் போனது.

எங்கு காணாமல் போனது
அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலை இணைக்கும் டிரேக் என்ற நதிக்கும் இடையில் இந்த விமானம் சென்ற போது திடீர் என்று மறைந்துள்ளது. அப்போதில் இருந்து இந்த விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.

என்ன விமானம்
இந்த போர் விமானம் C-130 Hercules ஆகும். அந்நாட்டின் அதி நவீன போர் விமானங்களில் இதுவும் ஒன்றாகும். கிங் ஜார்ஜ் தீவில் முக்கிய பணிகளை மேற்கொள்வதற்காகவும், சில சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இவர்கள் பயணம் செய்து உள்ளனர்.

எத்தனை பேர்
இந்த விமானத்தில் பயணிகள் 21 பேரும், பணியாளர்கள் 17 பேரும் பயணம் செய்து இருக்கிறார்கள். மொத்தம் 38 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்களை எந்த வகையிலும் இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications