ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விமானம்! ரன்வேயில் வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு! ஜப்பானில் ஷாக்
டோக்கியோ: கிழக்கு ஜப்பானில் உள்ள மியாசகி விமான நிலையத்தின் ஓடுதளத்தில் நேற்று திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்திருக்கிறது. இது இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்கா போட்ட குண்டு என்றும், தற்போதுதான்வெடித்திருக்கிறது எனவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானுக்கு அமெரிக்காதான் எமனாக இருந்தது. ஜப்பான் வசம் வலுவான விமானப்படை இருந்தது. எனவே, அண்டை நாடுகளில் இருந்த ராணுவ தளத்திற்கு எளிதாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் கொண்டு சேர்க்கப்பட்டது. இந்த பணியை செய்ய மியாசகி விமான நிலையம் மிகவும் பொருத்தமாக இருந்தது. எனவே, போர் சமயத்தில் இதனை ஜப்பான் முழுமையாக பயன்படுத்தியது. ஒரு கட்டத்தில் இதை உணர்ந்த அமெரிக்கா, மியாசகி விமான தளத்தை அழிக்க முடிவெடுத்தது.

அதன் மீது சரமாரியான குண்டுகள் வீசப்பட்டன. இதில் சில குண்டுகள் அப்படியே மண்ணுக்கு அடியில் புதையுண்டு போனது. போர் முடிந்த பின்னர், இந்த விமான நிலையத்தை ஜப்பான் வணிக ரீதியாக பயன்படுத்த தொடங்கியது. புதிய ஓடுபாதைகள் அமைக்கப்பட்டன. அன்று முதல் நேற்று வரை இந்த விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் பயன்படுத்தின.
இந்நிலையில் நேற்று இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை ஒன்றில் பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. எனவே, உடனடியாக இந்த விமான நிலையத்திற்கு வரும் அத்தனை விமானங்களும் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. பின்னர் ஜப்பான் ராணுவம், வெடி விபத்து குறித்து ஆய்வை தொடங்கியது.

ஆய்வில் வெடித்தது இரண்டாம் உலகப்போர் காலத்தில், அமெரிக்கா வீசிய குண்டு என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வெடி விபத்து நடந்த இடம் உடனடியாக சரி செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விமான நிலையத்தில் இன்னும் வெடிக்காத குண்டுகள் ஏதும் மிச்சம் இருக்கிறதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டு, அப்படி குண்டு இருப்பின் அவை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படும் என ஜப்பான் ராணுவம் கூறியிருக்கிறது.
தற்போது குண்டு வெடித்தபோது, விமானங்கள் எதுவும் அந்த ஓடுதளத்தில் இருக்கவில்லை. எனவே, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டை வீசியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications