இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மவுனத்தால் அதிர்ச்சி
Recommended Video
சுவிஸ்: இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சல் பாச்லெட் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அதன் தலைவர் மிச்சல் பாச்லெட், ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப வேண்டும்; மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை பிரச்சனை குறித்து எந்த ஒரு கருத்தையும் மிச்சல் பாச்லெட் குறிப்பிடவில்லை.
இலங்கையில் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் கதி என்ன? போர்க்குற்றவாளி ஒருவரையே இலங்கை ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சர்ச்சை உள்ளிட்டவை குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இது உலகத் தமிழர்களை மட்டுமல்ல மனித உரிமை ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே இலங்கை ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது குறித்து மிச்சல் பாச்லெட் கவலை தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போதைய கூட்டத்தில் அவர் எதுவுமே குறிப்பிடாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications