அணு ஆயுத போர் மிரட்டல்.. இப்படி ஒரு பதிலடியை நிச்சயமாக இம்ரான்கான் எதிர்பார்த்திருக்க மாட்டாரு
பிரெசெல்ஸ்: தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே அந்த நாட்டுடன் இந்தியா எந்த பேச்சுவார்த்தை நடத்தும் .அதுவரை எந்த வாய்ப்பும் இல்லை என பெல்ஜியத்தில் இந்திய வெளியுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பெல்ஜியம் நாட்டின் பிரெசெல்ஸ் நகரில் பொலிடிக்கோ வார இதழுக்கு பேட்டி அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜம்மு காஷ்மீருக்காக அணு ஆயுத போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்தது குறித்து கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், பாகிஸ்தான் இம்ரான்கானின் பேட்டியை படித்து பார்க்க நேரமில்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், "தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானின் எங்கோ ஒரு மூலையில், இருட்டில் இருந்து நடத்தப்படவில்லை. நேரடியாகவே பட்டபகலில் நடத்தப்படுகிறது. தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான், அதற்காக நீண்ட காலமாக நிதியுதவி செய்து வருகிறது. அத்தகைய செயல்களை நிறுத்தாவிட்டால் புதுடெல்லி- இஸ்லாமாபாத்(இந்தியா பாகிஸ்தான்) இடையே பேச்சுவார்த்தை என்பதற்கு வாய்ப்பே இல்லை.
தீவிரவாத செயல்பாடுகளை தடுத்து நிறுத்த காஷ்மீரில் தகவல் தொடர்பை துண்டிப்பது அவசியமானது. இது மக்களை ஓரளவு சிரமத்திற்கு உள்ளாக்கியது. ஒருபுறம் தீவிரவாதிகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் தகவல் தொடர்பை துண்டிக்கும் நான் அதேநேரம் மக்களுக்கு எப்படி இணையத்தை திறந்து வைப்பது. இதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
காஷ்மீரில் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். போலீசார் அவர்களின் வழக்கமான பணிகளில் ஈடுபட போகிறார்கள். காஷ்மீரில் படைகள் படிப்படியாக குறைக்கப்படும்.
இந்து தேசத்திற்காகவே ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக இம்ரான் கான் கூறியதை திட்டவட்டமாக மறுக்கிறேன். இதை சொல்பவர்களுக்கு இந்தியாவை பற்றி தெரியவில்லை என்று தான் நான் செல்வேன். அவர் சொல்வது போல் இந்தியாவின் கலாச்சாரம் இல்லை. மாநிலங்களின் அதிகாரங்களை இந்திய அரசு குறைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை,. ஜம்மு காஷ்மீரின் சூழ்நிலை என்பது வேறு" இவ்வாறு கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications