அகிம்சையே மாபெரும் மதம்.. வாய்மையே வெல்லும்.. வந்தே மாதரம்.. பேஸ்புக் "சுவற்றில்" எழுதிய மோடி!
Subscribe to Oneindia Tamil
கலிபோர்னியா: பேஸ்புக் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அலுவலகத்திற்குச் சென்ற மோடி அங்கிருந்த விசிட்டர்களுக்கான சுவற்றில் அகிம்சையே மாபெரும் மதம், வாய்மையே வெல்லும், வந்தே மாதரம் என தனது தாய் மொழி குஜராத்தியில் எழுதினார்.

டவுன்ஹால் மீட்டிங்குக்காக வந்திருந்த மோடி அப்போது இப்படி எழுதினார்.
முன்னதாக இந்த சந்திப்பைத் தொடர்ந்து டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பர்க்கும், பிரதமர் மோடியும் தங்களது டிஸ்பிளே இமேஜை அதாவது பேஸ்புக் பக்கத்தின் புரபைல் படத்தை மாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications