என்னை நிர்ப்பந்தப்படுத்தி வெளியேற்றியுள்ளனர், திரும்பிப் போகும் திட்டமே இல்லை.. மல்லையா பேட்டி
லண்டன்: இந்தியாவை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்தை எனக்கு ஏற்படுத்தியதால்தான் நான் வெளியேற நேரிட்டது. இப்போதைக்கு இங்கிலாந்தை விட்டு வெளியேறும் திட்டம் என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார் தொழிலதிபர் விஜய் மல்லையா.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார் மல்லையா. தற்போது அவரது பாஸ்போரா்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது.
மேலும் அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் வேலைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து அரசுக்கு இந்தியா கடிதமும் எழுதியுள்ளது. இதுதவிர மும்பை கோர்ட்டும் அவருக்கு எதிராக கைது வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளது.

நிர்ப்பந்தம்...
இந்த நிலையில் தான் நாடு திரும்பப் போவதில்லை என்று மல்லையா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பினான்ஷியல் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், "நான் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளேன்.

திட்டமில்லை...
என்னை நாட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நிலையை ஏற்படுத்தி விட்டனர். நான் இங்கிலாந்தை விட்டு வெளியேறும் திட்டமே இல்லை.

வங்கிகளுடன் உடன்பாடு...
வங்கிகளுடன் நியாயமான உடன்பாட்டை எட்ட விரும்புகிறேன். நாங்கள் தொடர்ந்து வங்கிகளுடன் பேசித்தான் வந்தோம். அவர்களும் உடன்பாடு காண விரும்புவதாகவே கூறி வந்தனர். ஆனால் நியாயமான உடன்பாட்டையே நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார் மல்லையா.

கடிதம்...
மல்லையாவை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ள நிலையில், அவரது இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து குடிமகன்...
இதற்கிடையே, தற்போது இங்கிலாந்தில் உள்ள மல்லையா, அந்நாட்டு குடிமகனாவே மாறி, வாக்காளர் பட்டியலிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications