அரபு நாடுகள் மோதல் எதிரொலி... இந்திய விமான பயணிகளுக்கு பாதிப்பு!
சவுதி அரேபியா மற்றும் கத்தார் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, இந்தியாவில் இருந்து கத்தாருக்கு, விமான சேவை வழங்கும் நிறுவனங்கள், கட்டணத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரியாத்: கத்தார் நாடு தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறி, அந்நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் துண்டித்துக் கொண்டுள்ளன. இதையடுத்து, கத்தார் நாட்டிற்கு நேரடி விமானச் சேவை மேற்கொள்ள முடியாத சிக்கல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
தோஹா விமான நிலையம் நோக்கிச் செல்லும் விமானங்கள், ஐக்கிய அரபு அமீரம் வான் எல்லையில் பறந்தால், விபரீதி விளைவுகள் ஏற்படும் என்றும் 5 அரபு நாடுகள் எச்சரித்துள்ளன.

இதனால், கத்தார் தலைநகர் தோஹாவுக்கு, விமான சேவை இயக்க வேண்டும் என்றால், பாரசீக வளைகுடா வழியாக, ஈரான், ஈராக் சென்று, அதன்பிறகே கத்தார் சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, விமான நிறுவனங்கள், பயணக் கட்டணத்தை உயர்த்தும் நிலை உருவாகியுள்ளது. இரட்டை செலவாகும் இந்த சேவையால், கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என, இந்திய விமான நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
தற்சமயம், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து, தோஹாவுக்கு, நேரடி விமான சேவை வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications