6 நிமிடங்களில் ரூ900 கோடிக்கு ஏலம் போன பேகானின் ஓவியம்: ஓவிய வரலாற்றில் புதிய சாதனை
நியூயார்க்: பிரிட்டன் ஓவியர் பேகான் வரைந்த ஓவியமொன்று சுமார் 900 கோடி ரூபாய்க்கு ஏலமெடுக்கப் பட்டு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஓவியர் பிரன்சிஸ் பேகான். இவரது தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றான மூன்று கோணங்களில் வரையப் பட்ட ஓவியம் ஒன்று நேற்று ஏலத்தில் விடப்பட்டது.
இதுவரை ஓவிய வரலாற்றிலேயே முதன்முறையாக ரூ900 கோடிக்கு அந்த ஓவியம் ஏலத்தில் எடுக்கப்பட்டு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மூன்று கோண ஓவியம்...
கடந்த 1969ம் ஆண்டு, ஓவியர் பேகான் அவரது நண்பர் லூசியான் பிராய்டை மாடலாக கொண்டு மூன்று ஓவியங்களை வரைந்தார். மூன்று கோணங்களில் வரையப்பட்ட இந்த ஓவியம் பேகானின் தலைச்சிறந்த ஓவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஏலம்....
நேற்று நியூயார்க் ஏல மையத்தில் ஏலம் விடப் பட்ட இந்த ஓவியம் அதிகபட்சமாக 85 மில்லியன் டாலருக்கு விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

127 மில்லியனுக்கு....
ஆனால், ஏலத்தின் தொடக்கமே 80-மில்லியன் டாலரில் தான் ஆரம்பித்தது. கடைசியாக போன் வாயிலாக சுமார் 127 மில்லியன் டாலருக்கு ஓவியம் ஏலம் எடுக்கப் பட்டது.

6 நிமிடத்தில்....
ஏலம் தொடங்கிய 6 நிமிடத்திலேயே விற்கப்பட்ட இந்த ஓவியத்தின் மதிப்பு கமிஷன் தொகையுடன் சேர்ந்து 142 மில்லியன் டாலர் ஆகும். அதாவதும் இந்திய மதிப்பில் சுமார் 900 கோடி ரூபாய்க்கு மேல்.

புதிய சாதனை....
இந்த ஓவியமே உலகில் அதிகத்தொகைக்கு விற்கப்பட்ட ஓவியமாக புதிய சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த ஆண்டு எட்வர்டு முஞ்ச் வரைந்த ஓவியம்தான் அதிகபட்சமாக 119 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications