ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு எவ்வளவு உதவிகரமாக இருந்திருக்கார் தெரியுமா.. இப்போ என்ன பண்றது?

Subscribe to Oneindia Tamil

டாக்கா: 1947 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையில் இருந்து உருவான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிற்கால கட்டத்தில் முக்கியமான பங்கைக் கொண்டிருந்த ஹசீனாவை இந்தியா எப்போதும் மதிப்புமிக்க கூட்டாளியாகக் கருதியது.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியை (BNP) நிறுவிய ரஹ்மான், 1981 இல் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கலீதா ஜியா 2006 வரை நாட்டை அவ்வப்போது ஆட்சி செய்தார். 2009 இல் ஹசீனாவும் அவரது அவாமி லீக் கட்சியும் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது இந்தியாவுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

bangladesh india

பங்களாதேஷின் மிகப்பெரிய சிறுபான்மை மதமான இந்துக்கள் போன்ற சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட்டதாக உணர்ந்தனர். அது இந்தியாவுக்கு நிம்மதியை கொடுத்துக் கொண்டிருந்தது.

கடந்த 15 ஆண்டுகளில், டாக்காவை கொல்கத்தா மற்றும் அகர்தலாவுடன் இணைக்கும் சாலைகளை ஹசீனா மீண்டும் அமைத்து சாதித்தார். 1947க்குப் பிறகு துண்டிக்கப்பட்டிருந்தன இந்த சாலைகள்.

பாலங்களைக் கட்டினார், ரயில் இணைப்புகளை மீண்டும் நிறுவினார் மற்றும் பிரம்மபுத்திரா நதி மற்றும் அதன் கிளை நதிகளில் சரக்குக் கப்பல்களை எளிதாக அணுகுவதற்கு வசதி செய்தார்.

இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்தது மற்றும் ஹசீனா இந்தியாவின் வட கிழக்கில் ஆட்டம் போட்ட தீவிரவாதிகளுக்கு தனது நாட்டுக்குள் அடைக்கலம் தர மறுத்தார். அசாமில் தீவிரவாதங்களை ஒடுக்க அது உதவியது.

ஹசீனா சீனாவுடன் ஒரு நல்ல உறவைக் கொண்டிருந்தாலும், இந்தியாதான் தனது முதல் நட்பு நாடு என்ற கொள்கை உள்ளவர். உதாரணமாக, 1 பில்லியன் டாலர் நதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு சீனாவை விட இந்தியாவையே தான் விரும்புவதாக அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

அவரது தலைமையின் கீழ், இந்தியாவையும் பங்களாதேஷையும் இணைக்கும் உள்கட்டமைப்பு மீண்டும் கட்டமைக்கப்பட்டது, மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டது. அதானி குழுமத்துடனான மின் துறை ஒப்பந்தத்தின் மூலம் இந்த உறவு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது, இருப்பினும் இந்த ஒப்பந்தம் வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகளிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியது.

மின்துறை ஒப்பந்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமாக எதிர்கட்சியினர் கருதினர், இது தற்போதுள்ள பதட்டத்தை அதிகரித்தது. பங்களாதேஷின் தேர்தல்களில் இந்திய தலையீடு பற்றிய குற்றச்சாட்டுகள் தீவிரமாகின. தேர்தல்கள் சுதந்திரமானவை அல்லது நியாயமானவை அல்ல என்று விமர்சகர்கள் கூறினர். இந்த காரணங்கள் ஷேக் ஹசீனா நிர்வாகத்திற்கு எதிரான பரவலான அதிருப்தி மற்றும் எதிர்ப்புகளுக்கு அச்சாரம் போட்டன.ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடு தழுவிய போராட்டம் தீவிரமானது. ஆனால் அரசாங்கத்தின் பதில் அன்பாக இல்லை. கடுமையாக இருந்தது, போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறைக்கு வழிவகுத்தது. இந்த அமைதியின்மை இறுதியில் ஹசீனாவை இந்தியாவிற்கு ஓட கட்டாயப்படுத்தியது.

bangladesh india

இந்து தேசியவாதம் கொண்ட பாஜக ஆளும் நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை, பங்களாதேஷ் மற்றும் பிற அண்டை நாடுகளுடனான அதன் உறவுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. வங்காளதேசத்தில் இந்து சிறுபான்மையினரை எதிரிகளாக பார்க்கும் கலிதா ஜியாவின் கீழ் இஸ்லாமிய வலதுசாரி அரசாங்கம் மீண்டும் வரலாம் என்பதுதான் இந்தியாவிற்கு இப்போது மிகப்பெரிய கவலை.

bangladesh india

பங்களாதேஷில் இந்தியா கணிசமான பொருளாதார தொடர்புகளைக் கொண்டுள்ளது, இரு நாடுகளுக்கும் இடையிலான வருடாந்திர வர்த்தகம் $13 பில்லியன் ஆகும். இந்த பங்குகளை கருத்தில் கொண்டு, பங்களாதேஷில் உடனடி தேர்தல் நடப்பதை விட இந்தியா ஸ்திரத்தன்மையை விரும்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+