அல்கொய்தாவுக்கு இந்தியாவிலிருந்து ஆள் பிடித்த பெங்களூர் டாக்டர்.. சவுதி அரேபியாவில் கைது

Subscribe to Oneindia Tamil

சவுதி: அல்-கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு இந்தியாவில் உள்ள இளைஞர்களை சேர்த்து வந்த பெங்களூரை பூர்வீகமாக கொண்ட, சபீல் அகமது என்பவர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் வசித்து வந்த டாக்டர். சபீல் அகமது குடும்பத்திற்கு தீவிரவாதத்தின் மீது ஆர்வம் அதிகம். அகமதுவின் அண்ணன் கஃபீல் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 29ல் ஐரோப்பாவின் கிளாஸ்கோ ஏர்போர்ட்டில் உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தி பலியானார்.

Bengaluru-origin al Qaeda top operative arrested in Saudi Arabia

இதையடுத்து சபீல் அகமது ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். சவுதியில் இருந்தபடி அல்கொய்தா மற்றும் லஷ்கர் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு இந்தியாவிலுள்ள இளைஞர்களை சேர்க்கும் வேலையில் சபீல் அகமது ஈடுபட்டு வந்தார்.

இதுகுறித்து டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு, சபீல் அகமது மீது வழக்கு பதிவு செய்தது. இந்தியாவிலுள்ள அனைத்து ஏர்போர்ட்டுகளுக்கும் லுக்அவுட் சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் சபீல் அகமது அந்த நாட்டு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல் அடையாளங்கள் சரியாக ஒத்துப்போகிறதா என்பதை இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.

விரைவில் இந்தியாவுக்கு சபீல் அகமதுவை அழைத்து வர பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சவுதி அரேபியாவிலிருந்து குற்றவாளிகளை பரிமாற்றம் செய்வதில் எந்த இடையூறும் கடந்த காலங்களில் இருந்தது இல்லை என்பதும் நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+