போபால் விஷவாயு வழக்கின் முக்கிய குற்றவாளி வாரன் ஆன்டர்சன் மரணம்- மறைக்கும் குடும்பத்தார்

Subscribe to Oneindia Tamil

Bhopal disaster prime accused Warren Anderson no more
ப்ளோரிடா: போபால் விஷவாயு கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளியான அமெரிக்க தொழில் அதிபர் வாரன் ஆன்டர்சன் தனது 92வது வயதில் மரணம் அடைந்தார்.

கடந்த 1984ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து விஷயவாயு கசிந்ததில் 35 ஆயிரம் பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் அப்போதைய தலைவரான அமெரிக்க தொழில் அதிபர் வாரன் ஆன்டர்சன் முக்கிய குற்றவாளி ஆவார். அவர் சம்பவம் நடந்த நான்காவது நாள் போபாலில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஜாமீனில் வந்த அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் இந்தியாவில் நடந்த வழக்கில் ஆஜராகவில்லை. அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு அமெரிக்காவுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் வெரோ பீச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆன்டர்சன் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 29ம் தேதி தனது 92வது வயதில் மரணம் அடைந்தார். ஆனால், அவர் இறந்ததை அவரது குடும்பத்தார் இதுவரை வெளியில் சொல்லாமல் மறைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொது ஆவணங்களில் இருந்து ஆன்டர்சன் இறந்த செய்தி வெளியே வந்துள்ளது. பல்லாயிரம் பேர் இறந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சந்திக்காமலேயே ஆன்டர்சன் அமெரிக்காவில் வாழ்ந்து இறந்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+