சூட்கேசுக்குள் மறைத்து சிறுவனை கடத்திய கில்லாடி பெண்; காட்டிக்கொடுத்த ஸ்கேன்
ஸ்பெயின்: ஸ்பெயினுக்குச் சொந்தமான பிரதேசமான, சியுட்டாவிற்கு எட்டு வயதுச் சிறுவன் ஒருவனை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து வைத்து கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கேன் மூலம் இதனை கண்டுபிடித்த அதிகாரிகள் சிறுவனைக் கடத்திய இளம்பெண்ணை கைது செய்தனர்.
மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த அந்த 8வயது சிறுவன், ஸ்பெயின் நாட்டின் சியூட்டாவிற்க சூட்கேசில் கடத்தப்பட்டு உள்ளான் என்று ஸ்பெயின் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
19-வயது இளம்பெண், ஸ்பானிஷ் விமான நிலையத்திற்கு சூட்கேசுடன் வந்து உள்ளார். அப்போது அந்த பெண்மணியில் சூட்கேஸ் ஸ்கேனிங் கருவியில் வைக்கப்பட்டது. அந்த சூட்கேஸை ஸ்கேன் செய்த அதிகாரி அதிர்ச்சியடைந்தார். காரணம் அந்த பெட்டிக்குள் கால்கள் மடக்கப்பட்ட நிலையில் ஒரு உருவம் தெரிந்தது. அந்தப் பெட்டியை திறந்து பார்த்தனர், அதில் 8 வயது சிறுவன் உயிரோடு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த சிறுவனை மீட்டு அதிகாரிகள், குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

8 வயது சிறுவன் கடத்தல்
8 வயது சிறுவன் அபு என்றும், இவர் ஐவரி கோஸ்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்து உள்ளது. சூட்கேசுக்குள் சிறுவனை மறைத்து கொண்டு வந்த 19 வயது பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பெண்ணை நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தினர்.

தந்தையும் கைது
சிறுவனின் தந்தையையும் அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். அவரும் சட்டவிரோதமாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது சிக்கிக் கொண்டார். அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் தந்தையும் ஐவரி கோஸ்டை சேர்ந்தவர், ஆனால் ஸ்பெயினின் கனாரே தீவில் வாழ்ந்து வருகிறார்.

ஊடகங்களில் பரபரப்பு
இதனிடையே சிறுவன் சூட்கேஸ் மூலம் மறைத்து கடத்தப்பட்டது, ஸ்கேனிங்கில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் உலகம் முழுவதும் ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

சட்ட விரோத ஊடுருவல்
தன்னாட்சி நகரமான செயுத்தாவின் வழியாக ஸ்பெயின் நாட்டிற்கு ஊடுருவ இதுபோன்று வருடத்திற்கு ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோத செயல்கள் ஈடுபட்டு சிக்கிக் கொள்கின்றனர். ஆப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருபவர்களால் ஸ்பெயினில் பெரும் பிரச்சனை நிலவுகிறது.

ஆயிரக்கணக்கானோர் ஊடுருவல்
கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 16 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சி செய்தனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 5 ஆயிரம் பேர் வெற்றிகரமாக ஸ்பெயின் நாட்டிற்குள் ஊடுருவிவிட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் 3 ஆயிரம் பேர் ஊடுருவி உள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications