ஒரே நாளில் 1,188 பேர் பலி.. கொரோனா பாதிப்பில் பயங்கர ஸ்பைக்.. பீதியில் பிரேசில்
பிரேசிலியா: பிரேசில் நேற்று, வியாழக்கிழமை 1,188 பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளது. உலகின் நம்பர் 2 கொரோனா ஹாட் ஸ்பாட்டான ரஷ்யாவை வேகமாக நெருங்கி வருகிறது பிரேசில்.
பிரேசில் நாட்டில், வியாழக்கிழமை நிலவரப்படி, 20,000க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் கொல்லப்பட்டுள்ளனர். 3,10,087 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள் உள்ளன. ஒரே நாளில் 18,500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், ஆனால் பிரேசிலில் பரவலான சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதிபர்
அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனாவை கையாளுவதில் தோற்றுவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரேசில் நாட்டு பொருளாதாரத்தை இது சீர் குலைத்து வருகிறது. சமூக விலகலை பின்பற்றுவதை அவர் கடுமையாக எதிர்க்கிறார் மற்றும் சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளை மதிக்காமல், கொரோனா வைரஸுக்கு தீர்வாக குளோரோகுயின் மாத்திரை அதிக அளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார் அவர்.

உறவு கசந்துபோனது
கவர்னர்கள் மற்றும் மேயர்களுடனான போல்சனாரோவின் உறவும் கசந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன்களை கவர்னர்கள் அறிவிப்பதால், அதிபர் கோபமடைந்துள்ளார். பொருளாதாரத்தை இயங்க வைப்பது மிகவும் முக்கியமானது என்பது அவர் கருத்தாக உள்ளது.

நிதி உதவி
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கான 60 பில்லியன் உதவித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க அதிபர் தயங்கி வருகிறார். அப்படி நிதி ஒதுக்க வேண்டுமானால், பொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை முடக்க வேண்டும் என்று, ஆளுநர்களை அவர் வலியுறுத்தி வருகிறார்.

கையெழுத்திடவில்லை
கொரோனா நிதியை மாநிலங்களுக்கும், மாநகராட்சிகளுக்கும் விநியோகிக்கும் மசோதாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆனால், நிதித்துறை அமைச்சர் பாலோ கியூடெஸின் வலியுறுத்தலால், அதிபர் இதில் கையெழுத்திடவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, பொதுத்துறை ஊழியர்களுக்கான, ஊதிய உயர்வை முடக்கும் நடவடிக்கையை எடுத்தால், இதில் கையெழுத்திடுவதாக அதிபர் கூறி வருகிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications