3 முறை பாசிட்டிவ் என விடாது கருப்பாக தொடர்ந்த கொரோனா.. 4ஆவது டெஸ்டில் பிரேசில் அதிபருக்கு நெகட்டிவ்
பிரேசிலியா: 3 முறை பாசிட்டிவ் என வந்து பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனேரோவை விடாது கருப்பு போல் பின்தொடர்ந்த கொரோனா, தற்போது 4ஆவது முறையாக எடுக்கப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என வந்துவிட்டது.
பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் பிரேசில், படுவேகமாக அதிக பாதிப்புகளை கொண்டு 2-ஆவது இடத்தில் உள்ளது.
இத்தனை பாதிப்புகள் இருக்கும் போதிலும் பிரேசிலில் ஊரடங்கையும் மாஸ்க் அணிவதையும் அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனேரோ அமல்படுத்தவில்லை. சிறிய வைரஸ் என்ன செய்யும் என கூறி ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்காமல் இருந்தார்.

முதல்முறை பாசிட்டிவ்
அவரது பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட அனைவரும் மாஸ்க்குகளை அணிந்து கொண்டாலும் அவர் மட்டும் மாஸ்க் அணியாமல் வலம் வந்தார். தனது ஆதரவாளர்களுக்கு கைகுலுக்குவது, கட்டி அணைப்பது ஆகிய கொரோனாவுக்கு பிடித்தமான விஷயங்களை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து அவர் தன்னை தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மீண்டும் பாசிட்டிவ்
இதையடுத்து இவருக்கு கடந்த 15-ஆம் தேதி மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பின்னர் மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்ட போல்சோனேரோ,மீண்டும் கொரோனா பரிசோதனை செய்வேன் என தெரிவித்திருந்தார்.

21ஆம் தேதி கொரோனா சோதனை
இந்த நிலையில் அவருக்கு நேற்றைய தினம் 3-ஆவது முறையாக 21-ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதியானதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
Recommended Video

4ஆவது முறை நெகட்டிவ்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை உட்கொண்டு வந்த அவர் 4 ஆவது முறையாக நேற்று கொரோனா சோதனை எடுத்துக் கொண்டார். அதில் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அதிபர், தனது பேஸ்புக் பக்கத்தில் அனைவருக்கும் வணக்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications