வந்தாச்சு பசும்பால் அலர்ஜிக்கு மாற்று... குழந்தைகளுக்கான ஒட்டகப்பால் பவுடர் ‘கேமலிசியஸ்’ அறிமுகம்!
துபாய் நிறுவனம் சிறு குழந்தைகளுக்கான ஒட்டகப்பால் பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாய்: துபாயில் ஒட்டகப்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒன்று முதல் மூன்று குழந்தைகளுக்கான பால் பவுடர் விற்பனைக்கு வந்துள்ளது.
துபாயில் இந்தாண்டிற்கான உணவுக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 'கேமலிசியஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஒட்டகப்பால் பவுடர் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

ஒரு வயது முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பாலைக் கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. பசும்பாலில் இருப்பதைவிட அதிகளவு வைட்டமின் சி இந்தப் பாலில் இருப்பதாக அதன் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பசும்பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மாற்றாக, இந்தப் பால் நல்ல சத்துத் தருவதாக அமையும் என கேமலிசியஸ் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
ஹாலந்து பால் பவுடர் நிறுவனத்துடன் சேர்ந்து துபாய் நிறுவனம் இந்த கேமலிசியஸ் பவுடரைத் தயாரித்துள்ளது. ஒட்டகப் பால் ஏற்கனவே பல இடங்களில் விற்பனையில் உள்ள நிலையில், ஒட்டகப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் முதல் பால் பவுடர் என்ற சிறப்பை இந்த கேமலிசியஸ் பெற்றுள்ளது.
துபாயில் விற்பனைக்கு வந்துள்ள இந்தப் பால் பவுடரை அடுத்த கட்டமாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்ய கேமலிசியஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications