For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரிய விபத்து.. 14 பேர் பலி : 40 பேர் படுகாயம்

சீனாவில் கன்சு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதில் 14 பேர் பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கன்சு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதில் 14 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் கன்சு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

China: At least 14 people have been killed and 40 injured in a highway pile-up

கன்சு நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலை ஆகும். இங்கு ஒரு நாளைக்கு பல்லாயிரம் வாகனங்கள் வேகமாக செல்வது வழக்கம். விபத்துகள் நடப்பது அரிதிலும் அரிது.

இந்த நிலையில் அங்கு வேகமாக சென்ற டிரக் ஒன்று நிலைதடுமாறி சாலை தடுப்பு மீது மோதியுள்ளது. அதையடுத்து பின் வந்த வாகனங்கள் எல்லாம் அந்த டிரக் மீது மோதியுள்ளது.

[தீபாவளியன்று வங்ககடலில் காற்றழுத்த தாழ்வுநிலை.. கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்]

வரிசையாக கார்கள், லாரிகள் அடுத்தடுத்து மோதியுள்ளது. வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 14 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.

இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளார். இவர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

English summary
Authorities in China say at least 14 people have been killed and 40 injured in a highway pile-up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X