உலகின் ‘கூரை’யில் சூரியமின் நிலையம் அமைத்துள்ள சீனா
பெய்ஜிங்: தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் பகுதியில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது சீனா. இப்பகுதி இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ள இந்த சூரியசக்தி மின்நிலையம் மூலம் சீனா, அடுத்த 25 வருடங்களுக்கு தினந்தோறும் 10 மெஹாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலுமாம்.
உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சூரிய மின்நிலையம் என்ற பெருமையை சீனாவின் இந்த மின்நிலையம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் கூரையில்...
உலகின் கூரை என வர்ணிக்கப் படும் திபெத் தற்போது சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்பகுதி வருடத்தில் 3000 மணி நேரத்திற்கு அதிகமாக சூரிய ஒளி சக்தியை பெற்றுக்கொண்டிருக்கும் சிறப்பைப் பெற்றது.

உயரமான இடம்...
இந்நிலையில், இந்தியா எல்லையோரம் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான ந்கரி என்ற இடத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் தனது சூரியசக்தி மின்நிலையத்தை அமைக்கும் பணியை ஆரம்பித்தது சீனா.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு...
கடல் மட்டத்திலிருந்து 4,270 மீட்டர் உயரத்தில் 24 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் இந்த மின் திட்டத்தின் மூலம் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு தினமும் 10 மெஹா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

காஷ்மீர் எல்லையில்...
கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ள இந்த மிகப்பெரிய பி.வி. மின்சார உற்பத்தி நிலையம் ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை கட்டுப்பாட்டு கோட்டு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications